articles

img

குழப்பத்தை ஏற்படுத்திய பிரதமர் மோடியின் “மான் கி பாத்”

பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்ப தற்காக நாட்டு மக்களுடன் உரை யாற்றுகிறேன் என்ற பெயரில் பிர தமர் மோடி  “மான் கி பாத்”  என்ற வானொலி நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் ஞாயி றன்று நடத்தி வருகிறார்.அதன்  படி இந்த வாரம் நடைபெற்ற “மான் கி பாத்” நிகழ்வில், “ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை கள் மட்டுமே செய்யுங்கள்” எனக் கூறி நாட்டு  மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரி வர்த்தனை மட்டும் மேற்கொள்ள வேண்  டும். கையில் இருந்து பணம் கொடுக்கா மல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டு  எனக்கு பகிருங்கள்” எனக் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சில் சரி யான புரிதல் ஏற்படவில்லை. காரணம்  டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக  தனக்கு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிறுவ தற்காக இவ்வாறு அவர் கூறினாரா? இல்லை வேறு எதாவது திட்டம் உள்ளதா? என நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே முன்னறிவிப்பின்றி கடந்த 2016 நவம்பர் 8 அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகளை திடீரென செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து நாட்டு மக்களை கடும் இன்ன லுக்கு உள்ளாக்கினார். அதே போல  ஏதாவது இந்த அறிவிப்பில் நடந்துவிடுமோ  என நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.